மலேசியப் பயணம்

சிங்கப்பூரில் நடத்திய அதே பயிலரங்கத்தை மலேசியாவிலும் நடத்த, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் அழைத்திருந்தார்கள். அதே இரண்டு நாள். அடுத்த சனி, ஞாயிறு. பத்ரி, சிங்கப்பூரிலிருந்து பஸ் மார்க்கமாக மலேசியா சென்றுவிட, நான் சென்னை வந்து, இடைப்பட்ட நான்கு நாள்களில் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி முடித்துவிட்டு, இங்கிருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றேன். மலேசியன் ஏர்லைன்ஸ்காரர்கள் உபசரிப்புத் திலகங்கள். நட்டநடு ராத்திரி விமானமென்றாலும் பயணம் முழுவதும் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் என்னத்தையாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். உபசாரங்களை அங்கீகரிப்பதில் தமிழர்களுக்கு … Continue reading மலேசியப் பயணம்